Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

ஜுன் 13, 2021 11:04

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 353 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 172 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண், 65 வயது பெண் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மேலும் நேற்று 1,360 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானதில் 231 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 353-ல் இருந்து 24 ஆயிரத்து 584 ஆக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்